நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காரீப் பருவத்தில் நாடு முழுவதும் 695.67 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழகத்தில் பயனடைந்த விவசாயிகள் விவரம்

प्रविष्टि तिथि: 21 FEB 2022 4:35PM by PIB Chennai

2021-22 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில், முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டது போல் நெல் கொள்முதல் சீராக நடைபெற்று வருகிறது.

சண்டிகர், குஜராத், அசாம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு  காஷ்மீர், ஜார்கண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்,   தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்காளம், வடகிழக்கு பகுதி (திரிபுரா), பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 20.02.2022 வரை 695.67 லட்சம் மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 94.15 லட்சம் விவசாயிகள் ரூ. 1,36,350.74 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து 1566401 மெட்ரிக் டன் நெல் ரூ 3070.15 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, 239460 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து 46 மெட்ரிக் டன் நெல் ரூ 0.09 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, 19 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800059

                                                                                ***********************


(रिलीज़ आईडी: 1800092) आगंतुक पटल : 248
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Bengali , English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu