விவசாயத்துறை அமைச்சகம்

இயற்கை விவசாயத்திற்கு ஊக்கம்: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரம்

Posted On: 04 FEB 2022 4:15PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

 

இயற்கை உரத்தை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கவும், நாட்டில் உணவு தானியங்களின் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் 2015-16-ம் ஆண்டு முதல் பரம்பரகத் கிரிஷி விகாஸ் எனப்படும் பாரம்பர்ய விவசாயத் திட்டம் மற்றும் வடகிழக்கு பகுதிக்கான இயற்கை விவசாய மதிப்புச்  சங்கிலி மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது.

 

இயற்கை விவசாயம் உள்ளிட்ட பாரம்பரிய உள்நாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக பரம்பரகத் கிரிஷி விகாஸின் துணைத் திட்டமாக 2020-21ல் அறிமுகப்படுத்தப்பட்ட பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்ததி மூலம் இயற்கை விவசாயத்தை அரசு  ஊக்குவிக்கிறது.

 

பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்ததியின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2020 செப்டம்பர் 30 அன்று ரூ 31.82 லட்சம் வெளியிடப்பட்டது. பரம்பரகத் கிரிஷி விகாஸ் திட்டம் மற்றும் வடகிழக்கு பகுதிக்கான இயற்கை விவசாய மதிப்பு சங்கிலி மேம்பாட்டு இயக்கம் ஆகியவற்றின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ 403.92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ 439.98 கோடி வெளியிடப்பட்டு, ரூ 308.94 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795449

                                                                                ***************



(Release ID: 1795599) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Manipuri