இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை குபோதா கார்பரேஷன் வாங்க இந்திய தொழிற்போட்டி ஆணையம்(சிசிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது

Posted On: 02 FEB 2022 4:50PM by PIB Chennai

போட்டி சட்டம்- 2002, 32வது பிரிவின் கீழ் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை குபோதா நிறுவனம் வாங்க இந்திய தொழிற்போட்டி ஆணையம்(சிசிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய பங்குகள் மற்றும் பரிமாற்ற வாரிய விதிமுறைகள் 2011-ன்படிமுன்னுரிமை ஒதுக்கீடு மற்றும் கட்டாய டெண்டர் சலுகை மூலம் எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை குபோதா நிறுவனம் வாங்குகிறது.

குபோதா நிறுவனம் கடந்த 1890ம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஜப்பான் நிறுவனம். இந்நிறுவனம் டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் போன்ற வேளாண் இயந்திரங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. மேலும் தண்ணீர் பாதுகாப்பு உட்பட வேளாண் தொடர்பான பொறியியல் தொழில்நுட்பங்களை வழங்குகிறது.

எஸ்கார்ட்ஸ் நிறுவனம் இந்திய நிறுவனமாகும். இந்நிறுவனமும், வோண்துறை தொடர்பான இயந்திரங்கள் மற்றும் ரயில்வே சாதனங்கள்  விற்பனையில் ஈடுபட்டுள்ளதுமேலும், எஸ்கார்ட்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி நிறுவனங்கள் மூலம், வேளாண் துறை தொடர்பான தீர்வுகள், நிதி மற்றும் பங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பான சிசிஐ-யின் விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும்.

-----


(Release ID: 1794805)
Read this release in: English , Urdu , Marathi , Hindi