நிதி அமைச்சகம்

திருச்சி, சென்னையைச் சேர்ந்த வருமானவரித்துறை மற்றும் சுங்க அதிகாரிகள் உட்பட 29 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

Posted On: 25 JAN 2022 5:38PM by PIB Chennai

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படும். குடியரசுத் தினத்துக்கு முதல் நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும்.

இந்தாண்டு 29 அதிகாரிகள் / ஊழியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1. திரு. ஏ வெங்கடேஷ் பாபு, உதவி ஆணையர், சுங்கத்துறை, திருச்சி.

2. திரு ஆனந்த் குமார் சவலம், உதவி ஆணையர், சுங்கத்துறை, சென்னை.

3. திருமதி எல் அபர்னா, கண்காணிப்பாளர், மத்திய ஜிஎஸ்டி, சென்னை;

4. திரு.எஸ். கல்யாணி சுந்தரி நாகராஜன், மூத்த புலனாய்வு அதிகாரி, ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குனரகம், கோவை மண்டல பிரிவு;

5. திரு கருணாகரன், மூத்த புலனாய்வு அதிகாரி, வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம், சென்னை.

6.  திரு. வி.பாலாஜி, மூத்த புலனாய்வு அதிகாரி, வருவாய் புலனாய்வு இயக்குனரகம், சென்னை.

இவர்கள் உட்பட 29 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792543

***********

 



(Release ID: 1792577) Visitor Counter : 259


Read this release in: English , Urdu , Hindi , Marathi