நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் வருமானவரித்துறை சோதனை: வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு.

இடுகை இடப்பட்ட நாள்: 28 DEC 2021 1:29PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் நந்தர்பர். நாசிக் மற்றும் துலே பகுதிகளில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் இரு குழுமங்களுக்கு சொந்தமான, 25க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் கடந்த 22ம் தேதி சோதனை நடத்தினர்.

 

இந்த சோதனையில் பல போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  செலவினங்களை கூடுதலாக கணக்கு காட்டி, வருவாயை குறைவாக கணக்கு காட்டியுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் பெயரில் துணை ஒப்பந்தங்கள் போலியாக கொடுக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள் மூலம் ரூ.150 கோடி அளவிலான வருமானத்தை இந்த குழுமங்கள் கணக்குகாட்ட வில்லை. நிலங்கள் பரிவர்த்தனை மற்றும் ரொக்க கடன்கள் ரூ.52 கோடி மதிப்பில்  நடந்துள்ளன. இவை கணக்கில் காட்டப்படவில்லை. இதற்கான  ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் மற்றும் நகைகளும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785759

                           *************************

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1785928) வருகையாளர் எண்ணிக்கை : 256
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu