நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 34,35,163.56 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
10 DEC 2021 3:41PM by PIB Chennai
பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் 5-வது கட்டம் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2020-21 மற்றும் 2021-22ஆம் நிதியாண்டில், டிசம்பர் 6-ம்தேதி வரை மொத்தம் ரூ.1,72,358.13 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 75987138.23 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 34,35,163.56 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 22,05,638 மெட்ரிக் டன் தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10, 283.81 கோடி செலவு செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 364.69 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
மாநிலங்களவையில் உணவு, நுகர்வோர் நலன் மற்றும் பொதுவிநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780091
----
(रिलीज़ आईडी: 1780240)
आगंतुक पटल : 717