மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டு மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு: தமிழகத்திற்கு ரூ 4581.06 லட்சம் வழங்கப்பட்டுள்ளது

Posted On: 10 DEC 2021 2:15PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக  பதிலளித்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை  அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

உள்நாட்டு மீன்பிடி தொழில் மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட மீன்வள மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

நாட்டில் மீன்வள மேம்பாட்டுக்காக 2015-16 முதல் 2019-20 வரை செயல்படுத்தப்பட்ட மீன்வளத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்கான திட்டம் நீலப் புரட்சிக்கான மத்திய அரசின் நிதியுதவி திட்டம் ஆகும்.

உள்நாட்டு மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் சலுகை நிதி வழங்குவதற்காக 'மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி' எனப்படும் ஒரு பிரத்யேக நிதி ரூ.7,522.48 கோடியுடன் உருவாக்கப்பட்டது. .

மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புக்கான மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பில்  ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாயிகள் கடன் அட்டை வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது

மேலும், பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனா என்ற முக்கிய  திட்டத்தை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இது வரை இல்லாத அளவில் 2020-2021 ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ .20050 கோடி  மதிப்பீட்டில் இது செயல்படுத்தப்படும்.

பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ 4581.06 லட்சம் வழங்கப்பட்டுள்ளது, புதுச்சேரிக்கு ரூ 1003.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780045

                                                                              ******


(Release ID: 1780127) Visitor Counter : 136
Read this release in: English , Urdu , Manipuri