சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலைகளில் விளக்குகள் அமைப்பு
Posted On:
09 DEC 2021 3:37PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று எழுத்து மூலம் பதில் அளித்த அவர், சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சாலைகள் அமைக்கும் போதே அதன் வடிவமைப்பு, கட்டுமானத்தின் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார். நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடி பகுதிகள், பேருந்து நிழற்குடை பகுதிகள், பேருந்து நிறுத்துமிடம், சிறு பாலங்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவற்றை வாகன ஒட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் சிறப்பு விளக்கு அமைப்புகள் அமைக்கப்படுவதாக அவர் கூறினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779713
----
(Release ID: 1779863)
Visitor Counter : 157