நிதி அமைச்சகம்

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை பட்டுவாடா

Posted On: 07 DEC 2021 5:38PM by PIB Chennai

ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டம், 2017-ன்படி, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு, ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாக, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று பாதிப்பு பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, ஜிஎஸ்டி வசூல் குறைந்ததால், அதிக இழப்பீடு வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இழப்பீட்டு நிதியத்திலிருந்து, மத்திய அரசு அண்மையில், ரூ.17,000 கோடியை மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்காக 03.11.2021 அன்று விடுவித்துள்ளது. ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை, பகுதி அளவு ஈடுகட்ட மாநிலங்கள் / சட்டப்பேரவைகளுடன் கூடிய யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ. 1,13,464 கோடிக்கு கூடுதலாக இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சாசன விதிமுறைகளின்படி, 5 ஆண்டுகளுக்கு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்க மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாகவும் திரு பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778931



(Release ID: 1779004) Visitor Counter : 152


Read this release in: English , Marathi , Telugu