மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய கல்வி கொள்கையின் கீழ் பழங்குடியினருக்கான பயன்கள்

Posted On: 06 DEC 2021 4:30PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் எழுத்துபூர்வமாக அளித்த  பதிலில் கூறியதாவது:  

உயர் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன்திறந்த வெளி மற்றும் தொலைதூர கல்வி முறைகளில் படிப்பதற்கு பல்கலைக் மானியக் குழு (யுஜிசி)  பல  நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பழங்குடியினர் மாணவர்கள் சந்திக்கும் மொழிப் பிரச்னையைப்  போக்க, திறந்த வெளி முறையில் உள்ள பெரிய அளவிலான பாடங்கள் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன.

சமூகத்தில் பலதரப்பட்ட பிரிவினருக்கு கல்வி உதவித் தொகை வழங்கவும் மத்திய அரசு மற்றும் யுஜிசி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஒற்றைப்  பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, பெண்களுக்கு பிஎச்.டி படிப்புக்கு பிந்தைய கல்வித் உதவித் தொகை, எஸ்.சி/எஸ்.டி மாணவர்களின் முதுநிலை படிப்புக்கான கல்வித் உதவித் தொகை, ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, சிறபான்மையினருக்கான மவுலான ஆசாத் கல்வி உதவித் தொகை போன்றவையும் வழங்கப்டுகின்றன

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778507

                                                                     **************

 

 

 

 



(Release ID: 1778626) Visitor Counter : 163


Read this release in: English , Urdu