சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பெருந்தொற்று ஆராய்ச்சி

Posted On: 03 DEC 2021 3:29PM by PIB Chennai

உயிரி பாதுகாப்பு தயார் நிலை மற்றும் வலுப்படுத்துவதற்கான பெருந்தொற்று ஆராய்ச்சி, பலதுறை தேசிய கல்விக்கழகங்கள் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு “பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்கம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2021-22 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு ரூ.1347 கோடி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும்.

இந்த முன்முயற்சி திட்டத்திற்கு 9 பிஎஸ்எல் – 3 பரிசோதனைக் கூடங்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிராந்திய ஆராய்ச்சி அமைப்பு, நுண்கிருமி ஆய்வுக்கான 4 தேசிய நிறுவனங்கள், தேசிய புனேயில் உள்ள எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நோய் ஒழிப்பு அறிவியல் மற்றும் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சி பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வரும் நுண்கிருமி ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைக் கூடங்களை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777641

*****



(Release ID: 1777774) Visitor Counter : 220


Read this release in: English , Urdu , Telugu