மத்திய பணியாளர் தேர்வாணையம்

2021 அக்டோபரில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் இறுதி செய்யப்பட்ட ஆட்சேர்பு முடிவுகள்

Posted On: 24 NOV 2021 12:49PM by PIB Chennai

2021 அக்டோபரில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் இறுதி செய்யப்பட்ட ஆட்சேர்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பின்வரும் விவரங்கள் பணியிடங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தொடர்பானவை ஆகும்.

சட்ட அதிகாரி நிலை 2. சட்ட மற்றும் ஒப்பந்தங்கள் பிரிவு, .வெளியுறவு அமைச்சகம்.

பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்: அவினாஷ் புரோஹித் (வரிசை எண் 20) திருமிகு பிரியங்கா மனோஜ் ஜவாலே (வரிசை எண் 141) நீரஜ் குமார் (வரிசை எண் 169) (தற்காலிகம்). பழங்குடியினர்,

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பணியிடத்திற்கு யாரும் பொருந்தவில்லை. மேற்கண்ட பதவிக்கான விளம்பரம் 2019 பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டது.

நீர்வளம், நதி வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயிர் துறை, ஜல் சக்தி அமைச்சகத்தின் மத்திய மண் மற்றும் பொருள் ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானி "பி" (கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்) பதவிக்கு கௌரவ் சிங் ராணா (வரிசை எண் 16) பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

இந்தப் பதவிக்கான விளம்பரம் 2020 பிப்ரவரி 6 அன்று வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1774505

**********



(Release ID: 1774762) Visitor Counter : 135