அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம்

प्रविष्टि तिथि: 15 NOV 2021 1:47PM by PIB Chennai

தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவன (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இம்யூனாலஜி) சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் 14.11.21 அன்று நடைபெற்றது.  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் புஷ்கர் சர்மா, வீக்கம், நோய்க்கிருமி உருவாக்கம், முதுமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அடிப்படை செயல்முறைகளைப் புரிந்துகொள்வதில் நிறுவனம் செய்த பணிகளை முன்வைத்தார்.

தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, மூலக்கூறு வடிவமைப்பு, மரபணு ஒழுங்குமுறை, இனப்பெருக்கம் மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், நவீன உயிரியலின் பல துறைகளில் அதிநவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக சார்ஸ்-கொவி-2 தடுப்பூசிக்கான இடைநிலை ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். பல்வேறு நோய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள

தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனம், விரிவுரைத் தொடர்கள் மற்றும் உரையாடல்களையும் நடத்தி வருகிறது.

நிதி ஆயோக்கால் அறிவிக்கப்பட்ட ஆர்வமுள்ள மாவட்டங்களில் ஒன்றில் அறிவியல் அருங்காட்சியகத்தையும் இந்நிறுவனம் அமைக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771910

<><><><><>


(रिलीज़ आईडी: 1772033) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu