உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

விடுதலையின் அமிர்த மகோத்சவம்

Posted On: 29 OCT 2021 2:05PM by PIB Chennai

கண்காணிப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கை இந்திய விமானப் போக்குவரத்து அகாடமியில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்தது.

அமிர்த மகோத்சவத்தைக் கொண்டாடுவதற்காக மத்திய கண்காணிப்பு ஆணையம் வழங்கிய சுதந்திர இந்தியா @ 75: நேர்மையுடன் கூடிய தற்சார்புஎனும் தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் நோக்கம் ஊழலின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பொது வாழ்வில் இருந்து ஊழலை அகற்றுவதற்கான வழிகளை வகுப்பதும் ஆகும்.

தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி கே சிங், கருத்தரங்கின் விளைவாக நடைபெறும் விவாதங்கள் ஊழலை ஒழிப்பதற்கும், புதிய இந்தியாவை உருவாக்குவதற்குமான நமது உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்துச் செயலாளர் திரு. ராஜீவ் பன்சால் பேசுகையில், அமைப்புகளை மேம்படுத்தவும் ஊழலுக்கான வாய்ப்புகளை குறைக்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூடுதல் செயலாளர் திரு. சுதிர் குமார், ஊழலை ஒழிக்க ஆணையம் எடுத்துள்ள பல்வேறு முயற்சிகள் பற்றி கூட்டத்திற்கு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767472

****



(Release ID: 1767709) Visitor Counter : 223


Read this release in: English , Urdu , Hindi