பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பள்ளி மாணவர்கள், எண்ணெய் கிணற்றை பார்வையிட ஏற்பாடு செய்தது ஆயில் இந்தியா நிறுவனம்

प्रविष्टि तिथि: 20 SEP 2021 4:56PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அசாம் மாநிலம் துலியாஜனில் உள்ள, ஆயில் இந்தியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், துலியாஜனில் உள்ள எண்ணெய் கிணற்றை இன்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. 

சுமார் 80 மாணவர்கள், எண்ணெய் கிணற்றை பார்வையிட்டு, ஹைட்ரோ கார்பன் உற்பத்தி குறித்து கேட்டறிந்தனர்.

எண்ணெய் கிணற்றின் அமைப்பு மற்றும் செயல்பாடு, அதில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் குறித்து மாணவர்களுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தின் பொறியாளர்கள் விளக்கினர். குறைந்த அழுத்தம், அதிக அழுத்தம் உள்ள எண்ணெய் கிணறுகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

எண்ணெய் உற்பத்தி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

*****************


(रिलीज़ आईडी: 1756470) आगंतुक पटल : 303
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी