பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய பாதுகாப்புத்துறை தொடக்க நிறுவனங்களின் சவால் போட்டி (DISC)5.0 : பாதுகாப்புத்துறை அமைச்சர் நாளை தொடக்கம்

Posted On: 18 AUG 2021 3:55PM by PIB Chennai

இந்திய பாதுகாப்புத்துறை தொடக்க நிறுவனங்களின் சவால் போட்டியை (DISC)5.0, பாதுகாப்புத்துறை புத்தாக்க அமைப்பு (DIO) நாளை (ஆகஸ்ட் 19) தொடங்குகிறது. இதை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.

இந்திய பாதுகாப்புத்துறை தொடக்க நிறுவனங்களின் சவால் போட்டி 1.0, சீர்மிகு பாதுகாப்புத்துறையில் புத்தாக்கம் (iDEX) ஆகிய சவால் போட்டிகள் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப்பின், டிஸ்க் 5.0 சவால் போட்டி நாளை தொடங்கப்படுகிறது.   

பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் குறிப்பிட்ட துறையில் சாத்தியமான ஒத்துழைப்புகளை மேற்பார்வையிட பலதரப்பினருக்கு ஒரு தளத்தை ஐடெக்ஸ் வழங்குகிறதுடிஸ்க் சவால் போட்டி முயற்சிகளுடன், பாதுகாப்புத்துறை புத்தாக்கத்தில் புதிய திறன்களை உருவாக்க நாட்டில் உள்ள வலுவான அறிவியல் மற்றும் ஆராய்ச்சி தளத்தை ஐடெக்ஸால் பயன்படுத்தி கொள்ள முடிகிறதுடிஸ்க் 1.0 சவால் போட்டியை விட, டிஸ்க் 5.0 சவால் போட்டி, அதிகமான சவால்களை கொண்டிருக்கும்.

டிஸ்க் 5.0 சவால் போட்டியின் தொடக்கம், இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்களை உருவாக்குவதில், தொடக்க நிறுவனங்களின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் மிக பெரிய முன்னேற்றமாக இருக்கும்.

இந்த சவால் போட்டிகள்தொடக்க நிறுவனங்களை புதுமையான கருத்துகளுடன் மேலும் ஒருங்கிணைக்க ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு படைப்பாற்றல் சிந்தனை அணுகுமுறையை கற்பிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746937

-----

 



(Release ID: 1747174) Visitor Counter : 197