குடியரசுத் தலைவர் செயலகம்

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 20 JUL 2021 5:34PM by PIB Chennai

பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு, தன்னலமற்ற மனப்பான்மை மற்றும் தியாக உணர்விற்கு நன்றி செலுத்துவதற்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக இணைந்து பணியாற்றவும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நமது மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளவும், ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பாகவும் பக்ரீத் பண்டிகை அமைகிறது.

பெருந்தொற்றின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்றி, சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காகப் பணியாற்றி, கொவிட்-19 தொற்றை எதிர்த்துப் போராட உறுதி ஏற்போம்”, என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737257

----



(Release ID: 1737331) Visitor Counter : 179