பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பாதிக்கப்பட்டோருக்கான அனைத்து சட்ட உரிமைகளும் அவர்களுக்கு கிடைப்பதை பாதுகாப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்: திருமதி ஸ்மிருதி இரானி

இடுகை இடப்பட்ட நாள்: 28 JUN 2021 7:57PM by PIB Chennai

பாதிக்கப்பட்டோருக்கான அனைத்து சட்ட உரிமைகளும் அவர்களுக்கு கிடைப்பதை பாதுகாப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி கூறினார்.

லால் பகதூர் தேசிய நிர்வாக அகாடெமியுடன் இணைந்து தேசிய மகளிர் ஆணையம் ஏற்பாடு செய்த குடும்ப வன்முறையை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி ஸ்மிருதி இரானி, பெருந்தொற்றின் போது பெண்களுக்கு உதவுவதற்காக தேசிய மகளிர் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளை பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730983

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1731022) வருகையாளர் எண்ணிக்கை : 281
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi