புவி அறிவியல் அமைச்சகம்

அடுத்த 5 நாட்களுக்கு நாட்டின் எந்த பகுதியிலும் வெப்ப அலை இருக்காது

Posted On: 25 JUN 2021 5:06PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

(தேதி: 2021 ஜூன் 25, வெளியீட்டு நேரம்: இந்திய நேரப்படி மாலை 4 மணி)  

தற்போதைய தட்பவெப்ப நிலவரம் மற்றும் அடுத்த ஐந்து நாட்களுக்கான எச்சரிக்கை:

நேற்றைய அதிகபட்ச தட்பவெப்ப நிலவரம்:

வெப்ப அலை: இல்லை

அதிகபட்ச வெப்பநிலை: ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகள், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லியின் பல பகுதிகள் மற்றும் கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 40.0°சி வெப்பம் பதிவானது.

நேற்று அதிகபட்சமாக சுருவில் (மேற்கு ராஜஸ்தான்) 43.4°சி பதிவானது.

இன்றைய குறைந்தபட்ச தட்பவெப்ப நிலவரம்:

இரவில் வெப்பம்: இல்லை

 குறைந்தபட்ச வெப்பநிலை: அசாம், மேகாலயா, துணை இமாலய மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமின் சில பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமாக (1.6°சி-ல் இருந்து 3.0°சி வரை) குறைந்தபட்ச வெப்பநிலை இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1730319

*****************



(Release ID: 1730353) Visitor Counter : 186


Read this release in: English , Urdu , Hindi , Punjabi