அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

யோகாசனங்கள் சரியாக செய்யப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கான கணித அளவீடுகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்

प्रविष्टि तिथि: 22 JUN 2021 5:36PM by PIB Chennai

யோகாசனங்கள் சரியாகவும் முறையாகவும் செய்யப்படுகிறதா என்பதை கண்டறிவதற்காக கணித அளவீடுகளைக் கொண்ட புதுமையான முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தசைகளின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான பரிசோதனை முறையான எலெக்ட்ரோமையோகிராபி (ஈஎம்ஜி) அடிப்படையிலான இந்த கணித அளவீட்டு முறையின் மூலம், யோகாசனங்கள் சரியாக செய்யப்படுகின்றனவா என்று கண்டறியலாம். இதன் மூலம் தேவையான மாற்றங்களை செய்து யோகா செய்பவர்கள் அதன் அதிகபட்ச பலனை பெறலாம்.

ராமையா மருத்துவ கல்லூரியின் இணை பேராசிரியர் டாக்டர் ரமேஷுடன் இணைந்து டாக்டர் எஸ் என் ஓம்கார் தலைமையேற்று நடத்திய இந்த ஆராய்ச்சி, தசை செயல்பாடுகளை யோகா மூலம் புரிந்துகொள்வதன் மீது கவனம் செலுத்தியது. உடல் மற்றும் மனம் சார்ந்த அளவீடுகளை ஆராய ஈஎம்ஜியை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729439

*****************


(रिलीज़ आईडी: 1729464) आगंतुक पटल : 298
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी