புவி அறிவியல் அமைச்சகம்
அடுத்த 5 நாட்களுக்கு நாட்டில் எந்தப் பகுதியிலும் அனல் காற்றுக்கு வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 JUN 2021 6:12PM by PIB Chennai
இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
(நாள்: ஜூன் 20, 2021, வெளியிடப்பட்ட நேரம்: இந்திய நேரப்படி மாலை 4 மணி)
தற்போதைய வெப்பநிலை நிலவரம் மற்றும் அடுத்த ஐந்து நாட்களுக்கான முன்னறிவிப்பு
நேற்றைய அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:
அனல் காற்று:- இல்லை
அதிகபட்ச வெப்பநிலை:- மேற்கு ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் 19.6.2021 அன்று அதிகபட்சமாக சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
நேற்று மிக அதிகமாக மேற்கு ராஜஸ்தானின் கங்காநகரில் 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இன்றைய குறைந்தபட்ச வெப்பநிலை நிலவரம்:
வெப்ப இரவு:- இல்லை
குறைந்தபட்ச வெப்பநிலை:- ஒடிசா, கடற்கரை ஆந்திரப்பிரதேசம், யானம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக (1.6 முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை) இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728807
----
(வெளியீட்டு அடையாள எண்: 1728856)
வருகையாளர் எண்ணிக்கை : 235