புவி அறிவியல் அமைச்சகம்

வடமேற்கு வங்காள விரிகுடாவின் எஞ்சியப் பகுதிகள், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பிகாரின் சில பகுதிகள் மற்றும் மேற்கு வங்கத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது

Posted On: 12 JUN 2021 3:53PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

(நாள்: 12 ஜூன் 2021, வெளியீட்டு நேரம்: மதியம் 2 மணி)

* வடமேற்கு வங்காள விரிகுடாவின் எஞ்சியப் பகுதிகள், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பிகாரின் சில பகுதிகள் மற்றும் மேற்கு வங்கத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், பிகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் முன்னேற்றம் அடையும்.

* வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அருகிலுள்ள மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடற்கரையோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நிலை கொண்டுள்ளது. அது இன்னும் தீவிரமடைந்து அடுத்த 2-3 தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் வடக்கு சத்தீஸ்கரை நோக்கி நகரக்கூடும்.

 

கொன்கன் மற்றும் கோவாவின் ஒரு சில பகுதிகளில் ஜூன் 12 முதல் 15 வரையிலும், மத்திய மகாராஷ்டிராவில் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் மிக கன மழை பெய்யக்கூடும். ஜூன் 12 முதல் 15 வரை கேரளாவில் உள்ள சில பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726530

----



(Release ID: 1726600) Visitor Counter : 126


Read this release in: English , Urdu , Hindi