ரெயில்வே அமைச்சகம்

ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு 3578 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம்

Posted On: 07 JUN 2021 6:09PM by PIB Chennai

நாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன் அளவு 26,000 மெட்ரிக் டன்களை  கடந்துள்ளது. தமிழகத்துக்கு 3,578 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே நாடு முழுவதும் இதுவரை, 1567க்கும் மேற்பட்ட டேங்கர்களில் 26,891 மெட்ரிக் டன்னுக்கு மேற்பட்ட ஆக்ஸிஜன்களை விநியோகித்துள்ளது

இதுவரை 383 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. தற்போது 5 ரயில்களில் 19 டேங்கர்களில் 353 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது.

தமிழகத்துக்கு இதுவரை 52 ரயில்கள் மூலம், 3,500 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இது வரை மகாராஷ்டிரா 614, உத்தரப் பிரதேசம் 3797, மத்தியப் பிரதேசம் 656, தில்லி 5864, ஹரியானா 2212, ராஜஸ்தான் 98, கர்நாடகா 3214, உத்தரகாண்ட் 320, தமிழ்நாடு 3578, ஆந்திரப் பிரதேசம் 2882, பஞ்சாப் 225, கேரளா 513, தெலங்கானா 2474, ஜார்கண்ட் 38, அசாம் 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்களை பெற்றுள்ளன.

 இன்னும் பல ஆக்ஸிஜன் ரயில்கள் இன்று இரவு புறப்படுகின்றன

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725090

-----



(Release ID: 1725181) Visitor Counter : 217