புவி அறிவியல் அமைச்சகம்

தில்லியில் காற்றின் தரம் மிதமாக இருக்கும்: வானிலை மையம் தகவல்

प्रविष्टि तिथि: 02 JUN 2021 1:47PM by PIB Chennai

தில்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமாக இருக்கும் என தேசிய வானிலை மைய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

காற்றில் உள்ள மாசுவின் அளவு 10 மைக்ரோ மீட்டர் என்ற அளவில் இருக்கும். மேற்பரப்பில் வீசும் பலத்த காற்று, புழுதியை எழுப்பலாம், அல்லது அருகில் உள்ள பகுதியில் இருந்து தூசுக்களைக் கொண்டு வரலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.   

தில்லியில் வரும் 7 ஆம் தேதி வரை காற்றின் தரம் மிதமாக இருக்க வாய்ப்புள்ளது எனவும், அதன்பின் மோசமாக வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723677

*****************


(रिलीज़ आईडी: 1723760) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu