எரிசக்தி அமைச்சகம்

மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் 300 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி

Posted On: 11 MAY 2021 6:25PM by PIB Chennai

மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான, இந்திய மின்தொகுப்பு நிறுவனம் பொசோகோ கொவிட்-19 தடுப்பூசி முகாமை நடத்தியது. இதில் மின்துறை அமைச்சகத்தின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 300 ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

இந்நிகழ்ச்சி தில்லியில் உள்ள அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட ஊழியர்கள், கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஆர்.கே.சிங் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பொசோகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு கேவிஎஸ் பாபா, ‘‘கொவிட்-19 தடுப்பு நடவடிக்கையில் பொசோகோ நிறுவனம் முன்னணியில் உள்ளது. மின்துறை ஊழியர்கள் பாதுகாப்புக்காக இருப்பதற்காகவும், நாட்டுக்கு தடையற்ற மின் விநியோகத்தை வழங்க தயாராக இருப்பதற்காகவும் இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது’’ என்றார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717737

 

----



(Release ID: 1717812) Visitor Counter : 137