ரெயில்வே அமைச்சகம்

137 டேங்கர்களில் 2067 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ பிராணவாயுவை விநியோகித்து 34 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை நிறைவு செய்தன

Posted On: 05 MAY 2021 5:46PM by PIB Chennai

அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது.

இது வரை சுமார் 2067 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 137 டேங்கர்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது.

34 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், தேவையுள்ள மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை மிகவும் குறைந்த கால அவகாசத்தில் கொண்டு சேர்ப்பதை இந்திய ரயில்வே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது வரை 2067 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது-

மகாராஷ்டிரா (174 மெட்ரிக் டன்), உத்தரப் பிரதேசம் (641 மெட்ரிக் டன்), மத்தியப் பிரதேசம் (190 மெட்ரிக் டன்), தில்லி (707 மெட்ரிக் டன்), ஹரியானா (229 மெட்ரிக் டன்) மற்றும் தெலங்கானா (123 மெட்ரிக் டன்).

*****************



(Release ID: 1716335) Visitor Counter : 197


Read this release in: English , Hindi , Punjabi , Urdu