அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ-யால் உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணம் குறித்த இணைய கருத்தரங்கு

Posted On: 30 APR 2021 6:08PM by PIB Chennai

சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ-யால் உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணம் குறித்த இணைய கருத்தரங்கிற்கு எம்எஸ்எம்இ-டிஐ, கட்டாக், 2011 ஏப்ரல் 30 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ-யால் உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணம் குறித்த இணைய கருத்தரங்கு வரிசையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ இயக்குநர் பேராசிரியர் (டாக்டர்) ஹரிஷ் ஹிராணி சிறப்புரையாற்றினார். எம்எஸ்எம்இ, கட்டாக், இயக்குனர் திரு பவன் குப்தா மற்றும் துணை இயக்குனர் திரு எஸ் கே சாஹு ஆகியோர் இணைய கருத்தரங்கில் பங்கேற்றனர். பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் ஒடிசா பகுதியில் உள்ள புது நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ-யால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டல் தொழில்நுட்பம் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பான பங்களிக்கும் வாய்ப்புள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டல் உபகரணத்தை சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ உருவாகியுள்ளது. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்காக தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக இதை வைக்க முடியும்.

இதை தயாரிக்க முன் வருபவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் தகவல்களை சிஎஸ்ஐஆர் - சிஎம்ஈஆர்ஐ வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715131

-----



(Release ID: 1715189) Visitor Counter : 155


Read this release in: English , Urdu , Hindi