தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிமுறைகள் 2021-ஐ அறிவித்தது மத்திய அரசு

Posted On: 25 FEB 2021 3:21PM by PIB Chennai

டிஜிட்டல் மீடியா தொடர்பான பயனர்களின் வெளிப்படைத்தன்மை குறைவு, பொறுப்பு  மற்றும் உரிமைகள் தொடர்பான கவலைகளுக்கு மத்தியில், பொது மக்கள் மற்றும் பல தரப்பினருடன் ஆலோசித்து தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021 உருவாக்கப்பட்டுள்ளன.

சமூக இணைய தளம் மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளம் தொடர்பாக இணக்கமான மேற்பார்வையிடும் பொறிமுறையை பெறுவதற்காகமத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021- உறுதி செய்துள்ளது.

இந்த விதிகளின் இரண்டாம் பாகம்  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்.

 டிஜிட்டல் மீடியா தொடர்பான நெறிமுறைகள், நடைமுறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான  3ம் பாகம்  தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்

 

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் படிஇந்தியாவில் தொழில் செய்ய சமூக ஊடக தளங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள், இந்திய அரசியலமைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேள்விகள் எழுப்பவும், விமர்சிக்கவும், சமூக ஊடக தளங்களை பயன்படுத்தலாம்.

சமூக ஊடக தளங்கள் சாதாரண பயனர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன, ஆனால் அதன் தவறான பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஓடிடி பற்றிய விதிகள் சுய கட்டுப்பாட்டு முறையில் கவனம் செலுத்துகின்றன. இதன் மூலம் வலுவான குறைதீர்ப்பு வழிமுறை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பத்திரிக்கை மற்றும் படைப்பாற்றல் சுதந்திரம் நிலைநிறுத்தப்படுகிறது.

தற்போது முன்மொழியப்பட்ட விதிமுறைகள் முற்போக்கானது, தாராளமயமானது மற்றும் சம காலத்தைச் சேர்ந்தது.

படைப்பாற்றல் மற்றும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பது குறித்த எந்தவொரு தவறான புரிதலையும் நீக்கி, மக்களின் மாறுபட்ட கவலைகளை இது தீர்க்க முற்படுகிறது

தியேட்டர், டி.வி, இன்டர்நெட் மூலம் பார்க்கும் பார்வையாளர்களின் வித்தியாசத்தை மனிதில் கொண்டு இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பின்னணி:

டிஜிட்டல் இந்தியா திட்டம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இது சாதாரண இந்தியர்களுக்கு தொழில்நுட்ப அதிகாரத்தை வழங்கியுள்ளது.

அதிகளவிலான செல்போன் பயன்பாடு, இன்டர்நெட் பயன்பாடு ஆகியவை காரணமாக இந்தியாவில் சமூக ஊடகங்கள் விரிவடைந்துள்ளன.

வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் : 53 கோடி

யூ ட்யூப் பயன்படுத்துவோர் :  44.8 கோடி

பேஸ்புக் பயன்படுத்துவோர் : 41 கோடி

 

இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர்: 21 கோடி

ட்விட்டர் பயன்படுத்துவோர் : 1.75 கோடி

 

இந்த சமூக இணையதளங்கள் மூலம் இந்திய மக்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றனர், கேள்வி எழுப்புகின்றனர், தகவல் அறிகின்றனர், தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்கின்றனர், அரசையும் அதன் செயல்பாடுகளையும் கூட விமர்சிக்கின்றனர்.

 ஜனநாயக முறைப்படி ஒவ்வொரு இந்தியரின் உரிமையையும் மத்திய அரசு மதிக்கிறதுஇந்தியா உலகின் மிகப் பெரிய திறந்தவெளி இன்டர்நெட் சமூகமாக உள்ளதுஅதனால் சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க வரவேற்கப்படுகின்றன.

ஆனால், அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700766



(Release ID: 1700876) Visitor Counter : 959