பாதுகாப்பு அமைச்சகம்

மகாராஷ்டிரா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அதுல் ஆனந்த் பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 22 FEB 2021 4:25PM by PIB Chennai

மகாராஷ்டிரா பிராந்திய கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் அதுல் ஆனந்த் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சி இந்திய கடற்படை தளமான ஐஎன்எஸ் குஞ்சாலியில் நடந்தது.

அங்கு ரியர் அட்மிரல் அதுல் ஆனந்துக்கு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இவர் இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் கடந்த 1988ம் ஆண்டு சேர்ந்தார்.

கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இவர் பயிற்சி பெற்றவர். அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் உள்ள பாதுகாப்பு படிப்புகளுக்கான ஆசிய பசிபிக் மையத்தில் நவீன பாதுகாப்பு ஒத்துழைப்பு படிப்பை இவர் முடித்துள்ளார்.

 விசிஸ்ட் சேவா பதக்கம் பெற்றுள்ள இவர், கடற்படையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். போர் கப்பல்கள் பலவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699939


(रिलीज़ आईडी: 1700005) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी