நிதி அமைச்சகம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை சீர்திருத்தம்: செயல்படுத்திய 12-வது மாநிலம் ராஜஸ்தான்

Posted On: 09 FEB 2021 3:28PM by PIB Chennai

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை சீர்திருத்தத்தை செயல்படுத்தியுள்ள 12-வது மாநிலமாக ராஜஸ்தான் உருவெடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ரூ 2,731 கோடியை கூடுதல் கடனாக பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை ராஜஸ்தானுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை வழங்கியுள்ளது.

இதுவரை, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை 12 மாநிலங்களும், வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை 12 மாநிலங்களும், உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தங்களை ஐந்து மாநிலங்களும், மின்சாரத் துறை சீர்திருத்தங்களை 2 மாநிலங்களும் செயல்படுத்தி உள்ளன. சீர்திருத்தங்களை செய்துள்ள மாநிலங்களுக்கு ரூபாய் 74,773 கோடி கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696493

*****************

 

 



(Release ID: 1696604) Visitor Counter : 115