நிதி அமைச்சகம்

திரிபுராவில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், இந்தியாவும் கையெழுத்திட்டன

Posted On: 18 DEC 2020 8:22PM by PIB Chennai

திரிபுராவில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக 4.21 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத் தயார்நிலை நிதியுதவி வசதி ஒப்பந்தத்தில்  ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் இந்தியா இன்று கையெழுத்திட்டன.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், நகர்ப்புற வசதிகள் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த நிதி உதவி பயன்படுத்தப்படும்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் மாநிலம் ஒன்றுக்கு இவ்வாறான நிதி உதவியை ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குவது இதுவே முதல் தடவையாகும்.

நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர். சி. எஸ். மொகபத்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குநர் திரு. டேகியோ கொனிஷி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681785

**********************



(Release ID: 1681825) Visitor Counter : 99