எரிசக்தி அமைச்சகம்

பசுமை மரக்கரி ஹேக்கத்தானைத் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு ஆர் கே சிங்

Posted On: 01 DEC 2020 7:13PM by PIB Chennai

தேசிய அனல்மின் நிறுவனமான என்டிபிசியின் துணை நிறுவனமான என்டிபிசி வித்யுத் வியாபார் நிகாம் நிறுவனத்தின் பசுமை மரக்கரி ஹேக்கத்தானை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஆர் கே சிங் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், என்டிபிசி நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதுமையை இந்த ஹேக்கத்தான் முன் நிறுத்துவதாகக் குறிப்பிட்டார். எந்த நிறுவனமும் இந்த புதுமை மனப்பான்மையை ஏற்றுக் கொண்டால்தான் வளர்ச்சி அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

கரியமில தடத்தைக் குறைக்கும் முயற்சியிலும் இந்த ஹேக்கத்தான் புதுமையைக் கடைப்பிடிப்பதாக அவர் தெரிவித்தார். வேளாண் கழிவுகளை மரக்கரியாக மாற்றும் முயற்சியில் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் தவறக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677457

-----



(Release ID: 1677540) Visitor Counter : 154