பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அரசியலமைப்பு தினத்தை கொண்டாடியது

Posted On: 26 NOV 2020 7:03PM by PIB Chennai

இந்திய அரசியல் சாசனம் செயல்பாட்டுக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, நிகழ்ச்சி ஒன்றுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இன்று ஏற்பாடு செய்திருந்தது.

பாதுகாப்பு இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அரசியல் சாசனத்தின் முன்னுரையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர்கள் வாசித்தனர். இணைய கருத்தரங்கமும் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676105

                                                                    -----



(Release ID: 1676275) Visitor Counter : 132