உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

பஞ்சாபில் மிகப்பெரிய உணவு பூங்காவை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்

Posted On: 24 NOV 2020 1:53PM by PIB Chennai

பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பக்ராவில், மிகப்பெரிய உணவு பூங்காவை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் விவசாயத்துறையின் மேம்பாட்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.

உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் :https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675275

                                                                     -----



(Release ID: 1675456) Visitor Counter : 157