பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

நாட்டில் 5,000 அழுத்தமூட்டப்பட்ட உயிரி-எரிவாயு மையங்களை அமைக்க ரூ 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்: அமைச்சர் திரு பிரதான்

Posted On: 20 NOV 2020 5:29PM by PIB Chennai

அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி மையங்களை நாடு முழுவதும் நிறுவுவதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று கையெழுத்தானது.

கட்டுபடியாகக்கூடிய போக்குவரத்துக்கான நீடித்த மாற்று வழி திட்டத்தின் கீழ், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நாட்டில் 5,000 அழுத்தமூட்டப்பட்ட உயிரி-எரிவாயு மையங்களை அமைக்க ரூ 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.

ஜெபிஎம் குழுமம், அதானி கேஸ், டோரண்ட் கேஸ், பெட்ரோநெட் எல் என் ஜி, இந்தியன் ஆயில், பிராஜ் இண்டஸ்ட்ரீஸ், சீ ஈ ஐ டி கன்சல்டன்ட்ஸ் மற்றும் பாரத் எனெர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674428

**********************



(Release ID: 1674488) Visitor Counter : 242