உள்துறை அமைச்சகம்

தேசிய பாதுகாப்புப் படை தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்

Posted On: 16 OCT 2020 5:13PM by PIB Chennai

மானேசரில் இன்று, தேசிய பாதுகாப்புப் படையின்(என்எஸ்ஜி) 36வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. ஜி.கிஷன் ரெட்டி, என்எஸ்ஜி-க்கு வாழ்த்து தெரிவிக்கும்போது கூறுகையில், பிரதமர் திரு.நரேந்திரமோடியின் தொலைநோக்கு வழிகாட்டுதலின் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களின் தலைமையின் கீழ் தேசத்தை முதலிடத்தில் நிறுத்தக் கூடிய வகையிலான உறுதியுடன் அரசு பணியாற்றுவதாக கூறினார். இந்த  தத்துவத்தை என்எஸ்ஜி வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார். 

மத்திய உள்துறை இணை அமைச்சர் மேலும் கூறுகையில், என்எஸ்ஜி கடினமான பணிகளை மேற்கொள்ளும் படையாகும். இது அவ்வப்போது பாராட்டத்தக்க பணிகளை முடித்துள்ளது என்று குறிப்பிட்டார். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் என்எஸ்ஜி முக்கியமான பங்கை வகித்திருக்கிறது. நாடு துன்பத்தில் இருக்கும்போது அதற்கு சேவை செய்யும் கடமையில் ஈடுபடும் என்எஸ்ஜி-யை ஒட்டுமொத்த நாடும் கவுரவமாக கருதுகிறது என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665156

**********************



(Release ID: 1665251) Visitor Counter : 127