நிதி அமைச்சகம்

அங்கீகாரம் அளிக்கப்பட்ட நபர்கள் வாயிலாக சந்தையை அணுக அனுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2020 8:10PM by PIB Chennai

ஐஎஃப்எஸ்சி பொருட்களில் வர்த்தக பரிமாற்றத்துக்கான முதலீட்டாளர் கட்டமைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் சர்வதேச நிதி சேவைகள் மைய அதிகார ((IFSCA))அமைப்பானது இரண்டாம் நிலை சந்தை பணப்புழக்கத்தை மேம்படுத்த, சந்தையை சார்ந்திருக்கும் வகையில், அங்கீகாரம் பெற்ற நபர்களின் வாயிலாக சந்தையை அணுகுவதற்கு கட்டமைப்பு ஒழுங்குமுறைகளை வெளியிட்டுள்ளது. 
அதிகாரம் பெற்ற நபர், எந்த ஒரு தனிநபராகவோ அல்லது பங்குதார ர் நிறுவனமாகவோ, எல்எல்பி அல்லது பங்கு தரகர் எனும் முகவராக ஒரு பங்கு சந்தையின் தளத்தில் வர்த்தகத்தை வழங்கும் பெருநிறுவன அமைப்பாகவோ இருக்கலாம். 
ஒழுங்குமுறையின் கீழ் பங்கு சந்தையின் பங்கு தரகர்/வர்த்தக உறுப்பினருக்கு (ஐஎஃப்எஸ்சிஏ அல்லது செபி அல்லது இரண்டிலும் பதிவு செய்திருக்க வேண்டும்) வெளிநாடுகளின் வரம்பு அடிப்படையில் அதிகாரம் பெற்ற நபர்கள் வாயிலாக முதலீட்டாளர்களுக்கு சந்தையை அணுகுவதற்கு அனுமதி வழங்கப்படும். 
ஒழுங்குமுறையின் விரிவான தகவல்களை ஐஎஃப்எஸ்சிஏ-வின் இணையதளத்தில் பார்க்கலாம்; https://ifsca.gov.in/Circular 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்; 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664521

**********

(Release ID: 1664521)


(வெளியீட்டு அடையாள எண்: 1664656) வருகையாளர் எண்ணிக்கை : 189
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu