பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஜம்மு பல்கலைக்கழகத்தின் குன்வர் வியோகி ஆண்டு நினைவு சொற்பொழிவில் உரையாற்றினார்


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் அதன் கடைசி கட்டத்தில் உள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 20 SEP 2020 6:01PM by PIB Chennai

காஷ்மீரில் உள்ள சாமானிய மக்கள் பயங்கரவாதத்தால் சோர்வடைந்துள்ளதாகவும், அதிலிருந்து அவர்களும், அவர்கள் குழந்தைகளும் முற்றிலுமாக வெளிவரும் ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

 

ஜம்மு பல்கலைக்கழகத்தின் "குன்வார் வியோகி ஆண்டு நினைவு சொற்பொழிவின்” முதலாவது பதிப்பில் "ஜம்மு காஷ்மீரில் 370 மற்றும் 35 பிரிவை ரத்து செய்ததற்கு பிறகான வழி" என்ற தலைப்பில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது என்றும் பயங்கரவாதிகள் புறமுதுகிட்டு ஓடும் போது எளிய இலக்குகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். ங்கு ஒவ்வொரு நாளும் நிலைமை சிறப்பாக மாறி வருவதாகவும், அடுத்துவரும் காலகட்டங்களில், ஒரு புதிய தொடக்கம் ஆரம்பமாகும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

 

டாக்டர் ஜிதேந்திர சிங், மோடி அரசாங்கத்தின் 2 வது பதவிக்காலத்தில், வடகிழக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதைப் போலவே ஜம்மு & காஷ்மீரிலும் சிறப்பு கவனம் செலுத்துமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும், மத்திய அரசின் வளங்கள் சமமா விநியோகிக்கப்பட்டுள்ளது என்றார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001MLU4.jpg

 

கடந்த ஆண்டு -370 வது பிரிவை ரத்து செய்தபோது நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை குறிப்பிடுகையில், இது வரலாற்றின் வழங்கொழிக்கப்பட வேண்டிய அரசியலமைப்பின் ஒழுங்கின்மை என்று அவர் விவரித்ததுடன், ஒரு தற்காலிக அம்சமாக கருதப்படுவது, கடந்த 70 ஆண்டுகளாக நிரந்தரமாக உள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையாலும், உறுதியான விருப்ப முடிவாலும் தான் வரலாற்று தவறுகள் திருத்தப்பட்டது என்றார்.

 

370 மற்றும் 35 பிரிவுகளை ரத்து செய்வது வன்முறைக்கு வழிவகுப்பதுடன், ரத்த பூமியாக்கும் என்று அழிவை விரும்பும் சில தீர்க்கதரிசிகள் கூறியது தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மறுபுறம், ஜம்மு & காஷ்மீரின் யூனியன் பிரதேசங்களில் ஹோலி, முஹர்ரம், ஈத், தீபாவளி போன்ற மத விழாக்களாகட்டும் அல்லது குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசிய விழாக்களாகட்டும் அது மிகவும் அமைதியான பண்டிகை காலத்தைக் கண்டது என்றார்.

 

சிறப்பு நிலை மற்றும் சுயராஜ்யம் என்ற பெயரில், உண்மையிலேயே மூன்று தலைமுறைகளின் வம்சா வழி ஆட்சியின் தொடர்ச்சியாகும் என்பதையும், பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தாததன் மூலம் அடி மட்டத்தில் சுயாட்சி மறுக்கப்படுவதையும் யூனியன் பிரதேச மக்கள் உணர்ந்துள்ளனர் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஜம்மு காஷ்மீர் இல் துணைநிலை ஆளுநரின் புதிய நிர்வாகத்தின் கீழ் பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட்டன, இதனால் உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் கிடைத்தது.

 

ஜம்மு-காஷ்மீர் குடியேற்ற விதிகள் அறிவிப்பை ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு புதிய சகாப்தத்தின் விடியலாக விவரித்த டாக்டர் ஜிதேந்திர சிங், வரலாறு நம்மை நிலைநிறுத்தும் என்றும், இந்த திருத்தம் சமத்துவத்தின் கொள்கை மற்றும் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இருந்தது என்பதை நிரூபிக்கும் என்றும் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் மூன்று தலைமுறை மக்களுக்கு நீதி மற்றும் கண்ணியத்துடன் வாழ உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மேலும் மேற்கு பாகிஸ்தான் அகதிகள் மற்றும் PoJK -யில் இருந்து இடம்பெயர்ந்த நபர்கள் தங்கள் நியாயமான உரிமைகளை மீட்டெடுத்துள்ளனர் என்றும் பல தசாப்தங்களாக இருந்த பாகுபாடு நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

இந்தியாவின் பிரதமர்கள் இருவரான ஐ.கே.குஜ்ரால் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்பதை நினைவு கூர்ந்த டாக்டர் ஜிதேந்திர சிங், பாரபட்சமான சட்டத்தின் காரணமாக அவர்கள் ஜம்மு-காஷ்மீரில் குடியேறத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்கள் பிரதமர்களாகியிருக்க மாட்டார்கள் என்றார். ஜம்மு-காஷ்மீரில் பணியாற்ற 30 முதல் 35 ஆண்டுகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவை அதிகாரிகள், நாள் முடிவில், மேலதிக மதிப்பீட்டிற்குப் பிறகு, வெளியேறவும், குடியேற வேறு இடத்தைத் தேடவும் கேட்டுக்கொள்ளப்படுவது முரணாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் அவர், இது பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருப்பதற்கு முற்றிலும் முரணானது என்றார், அதாவது அங்கு மாநில கேடரின் அகில இந்திய சேவை அதிகாரிகள் குடியேற அனுமதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கான நிலங்களும் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்களுக்கும் இதே நிலைதான் என்றார்.

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image00277FB.jpg

 

நிர்வாக விளைவுகளின் அடிப்படையில், டாக்டர் ஜிதேந்திர சிங், ஆகஸ்ட் 5, 2019 க்குப் பிறகு, வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பொறுப்புகள் அதிகரித்துள்ளது என்றும், மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரின் 20 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் குறை தீர்க்கும் வலைதளங்களை நிறுவ உதவுகிறது என்றும் கூறினார். மேலும் புதிய ஆட்சி குடிமக்களை மையமாகக் கொண்டிருப்பது ஒரு புதிய விதிமுறையாகிவிட்டது என்று அவர் கூறினார். இதேபோல், நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பிற துறைகளில்  30-40 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கியுள்ள பல மேம்பாட்டுத் திட்டங்கள் விடியலைக் காணத் தொடங்கியுள்ளன, என்றார்.

 

கலாச்சார விளைவு குறித்து பேசிய, டாக்டர் ஜிதேந்திர சிங், டோக்ரியை ஒரு உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுவதன் மூலம், மற்றொரு ஒழுங்கின்மை நீக்கப்பட்டது என்றார். மேலும், அடிமைத்தனமான, மந்தமான மற்றும் சுயநல மனநிலையிலிருந்து மக்கள் படிப்படியாக வெளியேறி, புதிய சூழலின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜம்மு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மனோஜ் தார் தனது உரையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் டோக்ரி மொழியின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த மத்திய அமைச்சரின் ஆர்வத்தை பாராட்டினார். ஜம்மு பல்கலைக்கழகத்தில் ஒரு முழு அளவிலான டோக்ரி மொழித்துறை செயல்பட்டு வருவதாகவும், விரைவில் டோக்ரி மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக “சிறப்பு மையம்” நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

பேராசிரியர் மோனிகா சேத்தி, ஆங்கிலத் துறைத் தலைவர் ஆயுஷ்மான் ஜாம்வாலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இணையக் கருத்தரங்கில் நியூஸ் 18-இன் மூத்த பத்திரிகையாளர் யுஷ்மான் ஜம்வால் பங்கேற்றார்.

 

<><><><><>



(Release ID: 1657097) Visitor Counter : 102


Read this release in: English , Urdu , Bengali , Punjabi