எரிசக்தி அமைச்சகம்

பிகாரில் ரூ 1.64 கோடி மதிப்புள்ள திட்டங்களை மத்திய மின்சார அமைச்சர் துவக்கி வைத்தார்

Posted On: 19 SEP 2020 11:33AM by PIB Chennai

பிகாரில் உள்ள கோவில்வாரில் ஆர் ஈ சி லிமிடெட் செயல்படுத்திய ரூ 1.64 கோடி மதிப்புள்ள பெருநிறுவன சமூக பொறுப்பு (சி எஸ் ஆர்)  திட்டங்களை மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஆர் கே சிங் துவக்கி வைத்தார்.

காணொலி மூலம் துவக்கி வைக்கப்பட்ட இந்த 14 திட்டங்களில், 8 திட்டங்கள் சாலை வசதிகள் அமைப்பதற்கானவை ஆகும். மூன்று திட்டங்களில் எல்இடி, சூரிய ஒளி உள்ளிட்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன நிலையில், மீதமுள்ள மூன்று திட்டங்களின் கீழ் சமூக கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.

போஜ்பூர் மாவட்டத்தின் கோவில்வார் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளை அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆர் ஈ சி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு எஸ் கே குப்தா, நிதி இயக்குனர் திரு அஜய் சவுத்ரி, செயல் இயக்குனர் திரு ஆர் லட்சுமணன், மாவட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

MBS/GB



(Release ID: 1656637) Visitor Counter : 110