உள்துறை அமைச்சகம்

ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கான பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீடித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்

Posted On: 30 JUN 2020 7:54PM by PIB Chennai

ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்குவதற்காக பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீடித்துள்ளதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைக்குப் பிறகு, அமைச்சர் விடுத்த டுவிட்டர் செய்தியில், கடினமாக உழைக்கின்ற விவசாயப் பெருமக்களுக்கும், நாட்டில் உண்மையாக வரி செலுத்தும் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அவர்களது கடின உழைப்பினாலும், அர்ப்பணிப்பு உணர்வினாலும் தான், இது போன்ற சோதனைக் காலங்களில், தேவை உள்ள மக்களுக்கு உதவ முடிகிறது என்றார்.

ஏழை மக்களின் நலனில் பிரதமர் கொண்டுள்ள அக்கறையையும், புரிந்துணர்வையும் பிரதமர் இத்திட்டத்தை நீடித்து வெளியிட்ட இந்த அறிவிப்பு பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் கூறியுள்ளார். நாட்டில் எந்த ஒருவரும் சியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்



(Release ID: 1635595) Visitor Counter : 172