புவி அறிவியல் அமைச்சகம்

அடுத்த 4-5 நாட்களில் இந்திய தெற்கு தீபகற்பத்தின் பல பகுதிகளில் ஓரளவு பரவலானது முதல் பரவலான மழையும் ஒரு சில இடங்கில் தீவிரமான கனமழை முதல் அதிதீவிர கனமழை வரையிலும் பெய்யக்கூடும்.

प्रविष्टि तिथि: 27 JUN 2020 8:59PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் கீழ் செயல்படும் புதுதில்லியில் உள்ள தேசிய வானிலை முன்கணிப்பு மையம் / பிராந்திய வானிலை மையம் கீழ்வரும் கணிப்பை வெளியிட்டுள்ளது:

கர்நாடகாவின் கடற்கரைப் பகுதியில் இருந்து லட்சத்தீவு மாலத்தீவு பகுதி வரை சராசரி கடல் மட்டத்தில் கடற்கரையில் இருந்து தொலைவில் கடலிலும் சராசரி கடல் மட்டத்துக்கு மேல் 3.1 கிமீ முதல் 5.8 கிமீக்கு இடையில் 11° என அட்சரேகைக்கு இணையாக கிழக்கு-மேற்கு திசையில் ஒரு குறுகிய பிளவு மண்டலம் நீண்டு இருக்கிறதுஇந்த தாக்கத்தின் கீழ் அடுத்த 4 முதல் 5 நாட்களில் இந்தியத் தெற்கு தீபகற்பத்தின் பல பகுதிகளில் ஓரளவு பரவலானது முதல் பரவலான மழையும், ஒரு சில இடங்களில் தீவிரமானது முதல் அதிதீவிரமான நிலைவரையும் மழை பெய்யக் கூடும்.

இந்தக் குறுகிய பிளவு வடக்கு நோக்கி நகர்வதால் வங்காள விரிகுடாவில் இருந்து வரும் தெற்குமுக / தென்கிழக்கு முகமான காற்று வலுவாக வடகிழக்கு, அதையொட்டிய கிழக்கு இந்தியா மீது ஒன்று சேர்கிறது.  எனவே வடகிழக்கு, கிழக்கு இந்தியாவை ஒட்டிய பகுதிகளில் ஆங்காங்கே தீவிர மற்றும் அதி தீவிர மழை அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு தொடரக்கூடும்.  மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு இமாலயா அடிவாரம், மேற்கு வங்கம், சிக்கம், அசாம், மேகாலயா ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே அதிதீவிர கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் ஓரளவு பரவலானது முதல் பரவலான மழையும் ஆங்காங்கே கனமழையும் பெய்யக் கூடும்.


(रिलीज़ आईडी: 1634968) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी