புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழை, மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் மேலும் முன்னேறியுள்ளது

Posted On: 16 JUN 2020 8:22PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:  

  • தென்மேற்கு பருவமழை, மேற்கு மத்தியப்பிரதேசத்தின் மேலும் பல பகுதிகள், கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மேலும் பல பகுதிகளில் முன்னேறியுள்ளது.
  • பருவமழையின் வடஎல்லை, கண்டலா, அகமதாபாத், இந்தூர், ரெய்சென், கஜூராஹோ, ஃபதேபூர், பரேஜ் வழியாகச் செல்கிறது.
  • அடுத்த இருதினங்களில் கொங்கன், கோவா, மத்தியப்பிரதேசம், மற்றும் மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் மிகக் கனமழை பரவலாக பெய்யக்கூடும்.
  • வடக்கு வங்கக் கடலுக்கு மேற்பகுதியிலும், அண்டைப் பகுதிகளிலும், காற்றழுத்த தாழ்வுமண்டலம் இம்மாதம் 19-ம் தேதி உருவாகக்கூடும்.

-----



(Release ID: 1632040) Visitor Counter : 150


Read this release in: English , Urdu , Hindi , Manipuri