நிதி அமைச்சகம்

'புதிய அரசு பங்கு 2025' விற்பனைக்கான ஏலம் (வெளியீடு), '6.19% அரசு பங்கு 2034' விற்பனைக்கான ஏலம் (மறு-வெளியீடு), மற்றும் '7.16% அரசு பங்கு 2050' விற்பனைக்கான ஏலம் (மறு-வெளியீடு) .

Posted On: 08 JUN 2020 6:28PM by PIB Chennai

இந்திய அரசு பின்வரும் ஏல விற்பனையை (வெளியீடு/மறுவெளியீடு) அறிவித்துள்ளது:  (i) 12,000 கோடி (நாமினல்) அறிவிக்கப்பட்ட தொகைக்கான, விலை அடிப்படையிலான ஏலம் மூலமான விற்பனைபுதிய அரசு பங்குகள், 2025’. (ii) 11,000 கோடி (நாமினல்) அறிவிக்கப்பட்ட தொகைக்கான, விலை அடிப்படையிலான ஏலம் மூலமான விற்பனை ‘6.19 சதவிகித அரசு பங்குகள், 2034’. (iii) 7,000 கோடி (நாமினல்) அறிவிக்கப்பட்ட தொகைக்கான, விலை அடிப்படையிலான ஏலம் மூலமான விற்பனை ‘7.16 சதவிகித அரசு பங்குகள், 2050’. மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடன் பத்திரங்களுக்கு, கூடுதலாக வரும் 2000 கோடி அளவிற்கான சந்தா தொகையை அரசே வைத்துக்கொள்ள அரசு தேர்வு செய்யலாம். இந்த ஏலங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின், மும்பை கோட்டையிலுள்ள மும்பை அலுவலகத்தில் 22 ஜூன் 2020 அன்று (வெள்ளிக்கிழமை) பன்முக விலை முறையைப் பயன்படுத்தி நடத்தப்படும்அரசு கடன் பத்திரங்களில் போட்டியற்ற ஏலம் எடுக்கும் வசதித் திட்டத்தின் படி, பங்கு விற்பனையின் மொத்த அறிவிக்கப்பட்ட தொகையில் 5 சதவீதம் தகுதியுள்ள தனியாருக்கும், அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படும்.

 

ஏல முடிவுகள் 12 ஜூன், 2020 வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும். வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் 15 ஜூன், 2020 திங்கள்கிழமையன்று பணம் செலுத்த வேண்டும்


 

***



(Release ID: 1630288) Visitor Counter : 202


Read this release in: Urdu , Punjabi , English , Hindi