புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேற்றம்

Posted On: 07 JUN 2020 8:26PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளதாவது:

  • தெற்கு கர்நாடகாவின் உட்பகுதிகள், ராயலசீமாவின் சில பகுதிகள், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஆகியவற்றிலும் வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதி முழுவதிலும், வங்கக் கடலின் மேற்கு மத்தியப் பகுதிகள் சிலவற்றிலும், வங்கக் கடலின் கிழக்கு மத்தியப் பகுதி முழுவதிலும், வங்கக் கடலின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் சிலவற்றிலும் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறியுள்ளது.
  • தற்போது பருவமழையின் வடஎல்லை, கார்வார், ஷிமோகா, தும்குரு, சித்தூர், சென்னை ஆகிய இடங்கள் வழியாகச் செல்கிறது.
  • மத்திய அரபிக் கடலின் சில பகுதிகள், கோவா, கொங்கனின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் ராயலசீமாவின் சில பகுதிகள், தமிழ்நாட்டின் எஞ்சியுள்ள பகுதிகள், ஆந்திரப்பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள், வங்கக் கடலின் மத்திய வடக்குப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகள் ஆகியவற்றில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகிக் கொண்டுள்ளது.
  • அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் கிழக்கு மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாகக் கூடும். இது மேற்கு, வடமேற்கு முகமாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையக் கூடும்.

-----



(Release ID: 1630184) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Hindi , Manipuri