அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நானோ மற்றும் மென்பொருள் அறிவியலுக்கான மையம் நீரிலிருந்து ஹைட்ரஜன் உற்பத்திக்கு, குறைந்த விலை வினையூக்கியை உருவாக்குகிறது

Posted On: 05 JUN 2020 3:04PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் () தன்னாட்சி நிறுவனமான நானோ மற்றும் மென்பொருள் அறிவியலுக்கான மைய (CeNS) விஞ்ஞானிகள், மாலிப்டினம் டை ஆக்சைடை என்னும் குறைந்த விலை வினையூக்கியை பயன்படுத்தி நீரிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்க  திறமையான வழியைக் கண்டறிந்துள்ளனர்.

ஹைட்ரஜன் வளிமண்டலத்தில் இணைக்கப்பட்ட மாலிப்டினம்ர் டை ஆக்சைடு (MoO2) மீநுண் பொருள்கள், ஆற்றல் உள்ளீட்டைக் குறைத்து, அதிக செயல்திறனுடன் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரிக்கும் திறமையான வினையூக்கிகளாக செயல்பட முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். நீரிலிருந்து ஹைட்ரஜனை உருவாக்குவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய முறையாக மின் பகுப்பு இருந்தாலும், ஒரு வினையூக்கியின் முன்னிலையில் வீழ்த்தக்கூடிய ஆற்றல் உள்ளீடு தேவைப்படுகிறது.

மேலதிக விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1629588



(Release ID: 1629716) Visitor Counter : 175


Read this release in: Urdu , English , Hindi