புவி அறிவியல் அமைச்சகம்

`அம்பான்' புயல் தொடர்ந்து கண்காணிப்பு (இந்திய நேரப்படி 12.30 மணி நிலவரம்)

Posted On: 17 MAY 2020 6:47PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு அதன் சமீபத்திய அறிக்கையின் படி (இந்திய நேரப்படி 1230 மணிக்கு) பின்வரும் தகவலை வெளியிட்டுள்ளது:

தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று பிற்பகலில் (மே 16 இந்திய நேரப்படி 14:30 மணிக்கு) தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, மாலையில் (மே 16 இந்திய நேரப்படி 17:30 மணிக்கு) வங்காள விரிகுடாவின் தெற்கே மத்தியப் பகுதிகளில் `அம்பான்' புயலாக உருவெடுத்துள்ளது.  இன்று காலை 08.30 மணிக்கு அது தீவிர புயலாக மாறி, ஒடிசா மாநிலம் பாரதீப்பில் இருந்து 990 கிலோ மீட்டர் தெற்கே, மேற்குவங்கம் திகாவுக்கு தெற்கு-தென்மேற்கே 1140 கிலோ மீட்டர் தொலைவில், வங்கதேசம் கேபுப்பாராவிற்கு தெற்கு-தென்மேற்கே 1260 கிலோ மீட்டர் தொலைவில் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

            அடுத்த 12 மணி நேரத்தில் அது மிக தீவிர சூறாவளிப் புயலாக தீவிரமடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் அது வடக்கு நோக்கி மெல்ல நகர்ந்து, பிறகு வடக்கு - வடகிழக்கில் சென்று, வங்காள விரிகுடாவில் வடமேற்கில் வேகமாகப் பயணித்து மேற்குவங்கம் - வங்கதேச கடலோரப் பகுதியில் சாகர் தீவுகளுக்கும் (மேற்குவங்கம்) ஹாட்டியா தீவுகளுக்கும் (வங்கதேசம்) இடையில் 2020 மே 20 ஆம் தேதி பிற்பகல் / மாலையில் மிக தீவிர சூறாவளிப் புயலாகக் கரையைக் கடக்கும்.



(Release ID: 1624723) Visitor Counter : 137


Read this release in: English , Urdu , Hindi , Manipuri