ஜவுளித்துறை அமைச்சகம்

தில்லி சர்வதேச கைவினைப்பொருட்கள், பரிசுப்பொருட்கள் கண்காட்சி-2020 ரத்து

Posted On: 29 MAR 2020 7:37PM by PIB Chennai

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கொவிட்-19 பரவலை கருத்தில் கொண்டு, தில்லியில் வரும் ஏப்ரல் 15 முதல் 19 வரை நடைபெறுவதாக இருந்த  49ஆவது சர்வதேச கைவினைப்பொருட்கள், பரிசுப்பொருட்கள் கண்காட்சி-2020ஐ, கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி குழுமம் ரத்து செய்துள்ளது. மொத்த தேசமும் முடக்க நிலையில் இருக்கும் சூழலில் இந்தக் கண்காட்சியை நடத்துவது ஏதுவாக இருக்காது என்று இந்த குழுமத்தின் தலைமை இயக்குனர் திரு ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

***



(Release ID: 1609192) Visitor Counter : 124