வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 9 ஆவது பிராந்திய விரிவடைந்த பொருளாதார பங்களிப்பு அமைச்சர்கள் நிலை கூட்டத்தில் பியூஷ் கோயல் பங்கேற்கிறார்

Posted On: 10 OCT 2019 2:05PM by PIB Chennai

தாய்லாந்தின் பாங்காக் நகரில் அக்டோபர் 11, 12 தேதிகளில் நடைபெறவுள்ள 9 ஆவது பிராந்திய விரிவடைந்த பொருளாதார பங்களிப்பு அமைப்பின் அமைச்சர்கள் நிலை கூட்டத்தில் மத்திய தொழில் வர்த்தகத் துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.   பாங்காக்கில் நவம்பர் 4, 2019 அன்று நடைபெறவுள்ள  3 ஆவது அரசுத் தலைவர்கள் நிலையிலான உச்சிமாநாட்டிற்கு முன் கடைசியாக நடைபெறும் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் இதுவாகும். இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இந்தக் கூட்டத்திற்கு இடையே ஜப்பான், சிங்கப்பூர், சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொழில் வர்த்தகத் துறை அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார். 

 

பிராந்திய விரிவடைந்த பொருளாதார பங்களிப்புக்கான பேச்சு வார்த்தை 2013-ல் தொடங்கப்பட்டது.  நவீன, விரிவான, உயர்தரமான, பரஸ்பரம், பயன்தரத்தக்க பொருளாதாரப் பங்களிப்புக்கு ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் இந்த அமைப்பின் தடையில்லா வர்த்தக ஒப்பந்த நாடுகளுக்கு இடையே உடன்பாட்டை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.

**********



(Release ID: 1587702) Visitor Counter : 145