பிரதமர் அலுவலகம்

ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 07 JAN 2019 10:06PM by PIB Chennai

ஜப்பான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. டரோ கோனோ பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (07.01.2019) சந்தித்துப் பேசினார்.

     பிரதமர் திரு மோடி 2018-அக்டோபர் மாதத்தில் ஜப்பான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பிறகு சமீப மாதங்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திரு. கோனோ பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

பிரதமர் திரு. மோடி, 2018-அக்டோபரில் ஜப்பான் நாட்டிற்கு தாம் மேற்கொண்ட வெற்றிகரமான பயணம் குறித்து நினைவு கூர்ந்தார். இந்தியா-ஜப்பான் இடையேயான சிறப்பு உத்தி மற்றும் சர்வதேச கூட்டுறவினை மேலும் வலுபடுத்த தான் உறுதியோடு இருப்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

     இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜப்பான் நாட்டுடனான வருடாந்திர உச்சி மாநாட்டின் அடுத்த சுற்றை நடத்த இந்தியா எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

********

 



(Release ID: 1559035) Visitor Counter : 124