குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குடியரசுத் துணைத் தலைவர் மும்பையில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்

Posted On: 20 JUN 2018 1:46PM by PIB Chennai

மும்பையில் நாளை (21.06.2018) பாண்ட்ரா ரிக்லமேஷன் சீலிங்க் கடலோரப் பகுதியில் நடைபெறவுள்ள 2018 சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு முதன்மை விருந்தினராகப் பங்கேற்கிறார்.

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவந்திர பட்னவிஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மும்பையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இந்தக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் உடல் நலத்திற்கும் முழுமையான அணுகுமுறையை யோகா வழங்குகிறது என்பதை அங்கீகரிக்கும் வகையில் ஐ.நா. ஒவ்வொரு ஆண்டும் ஜூன்           21-ந்தேதியை சர்வதேச யோகாதினமாக அறிவித்தது. 2015 ஜூன் 21-ந்தேதி முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றில் ஆண்டுதோறும் யோகாவை கடைப்பிடிப்பதால் ஏற்படும் பலன்களை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் மையக்கருத்து “அமைதிக்கு யோகா” என்பதாகும்.



(Release ID: 1536051) Visitor Counter : 82